ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் திருகோணமலை

Date:

இலங்கை முழுவதும் வாழும் கலைஞர்களை ஒன்றிணைத்து கலைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் (16) திருகோணமலை தளம் அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் இடம் பெற்றது.

இதன்போது இலங்கையின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து கலைஞர்கள் வருகை தந்து பங்கு கொண்டனர்.

ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாநிதி சிவசுதன், செயலாளர் அன்பரசன் உட்பட உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, திருகோணமலை பிராந்தியத்திற்கான கலைஞர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதன் போது திருகோணமலையை சேர்ந்த கலைஞர்கள் பங்கு கொண்டிருந்தனர்.

எதிர்காலத்தில் புதிய கலைஞர்களை உள்வாங்குவதற்கும், சமூகத்தில் ஏற்கனவே காணப்படும் கலை மற்றும் கலைஞர்களை அடையாளப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘வாயை மூடிப் பேசவும்’: தமிழரசின் சித்திரை புத்தாண்டு தீர்மானம் இதுதான்!

சித்திரை புத்தாண்டில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய...

மீனவரை சித்திரவதை செய்த கடற்படை மீது நடவடிக்கை இல்லையா?

கடற்படையினரால் கணவரான மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம்...

புகையிரதம் மோதி ரஷ்ய யுவதி பலி

பெலியத்தாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியதில் 23...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்