Pagetamil
கிழக்கு

ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் திருகோணமலை

இலங்கை முழுவதும் வாழும் கலைஞர்களை ஒன்றிணைத்து கலைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் (16) திருகோணமலை தளம் அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் இடம் பெற்றது.

இதன்போது இலங்கையின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து கலைஞர்கள் வருகை தந்து பங்கு கொண்டனர்.

ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாநிதி சிவசுதன், செயலாளர் அன்பரசன் உட்பட உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, திருகோணமலை பிராந்தியத்திற்கான கலைஞர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதன் போது திருகோணமலையை சேர்ந்த கலைஞர்கள் பங்கு கொண்டிருந்தனர்.

எதிர்காலத்தில் புதிய கலைஞர்களை உள்வாங்குவதற்கும், சமூகத்தில் ஏற்கனவே காணப்படும் கலை மற்றும் கலைஞர்களை அடையாளப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

மூதூர் இரட்டைக் கொலை: 15 வயது சிறுமி கைது!

Pagetamil

இரு பெண்கள் வெட்டுக்காயத்துடன் சடலங்களாக மீட்பு!

Pagetamil

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி உறுப்பினர் போர்க்கொடி

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment