தனது புண்ணை தோண்டி பெற்ற மகளுக்கு உண்ணக்கொடுத்த தந்தை கைது!

Date:

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கோவில் குளத்தில் தந்தை ஒருவர் தனது புண் (சிரங்கை) தோண்டி தனது மகளான ஒரு வயதுடைய சிறுமிக்கு சாப்பிடக் கொடுத்த போதைப்பொருளுக்கு அடிமையாகிய 24 வயதுடைய தந்தையை 2300 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் நேற்று புதன்கிழமை (29) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்

குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் சம்ப தினமான நேற்று இரவு 8.00 மணியளவில் இளம் குடும்பம் ஒன்றின் போதைக்கு அடிமையாகிய கணவன் அவரது மகளான ஒரு வயதுடைய குழந்தைக்கு அவரது புண்ணை தோண்டி சாப்பிடக் கொடுத்துள்ளார். இதை கண்ட மனைவி அலரிக் கொட்டையை உட்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்த போது அயலவர்கள் கண்டு அவரை காப்பாற்றி சிறுவர் மகளிர் தொடர்பான அவசர 1929 இலக்கத்துக்கு அழைத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பரிசோதகர் த. ரஜினிகாந்த் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சென்று குறித்த வீட்டை முற்றுகையிட்டு சிறுமியை சித்திரவதை செய்த தந்தையை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 2300 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டனர்

இதில் கைது செய்யப்பட்டவரை வைத்திய பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...

கிளிநொச்சியில் திடீர் வாகனப் பரிசோதனை

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும்...

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்