Pagetamil
முக்கியச் செய்திகள்

இலங்கை காற்றாலை மின்திட்டத்திலிருந்து விலக அதானி நிறுவனம் முடிவு?

இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இலங்கையில் தனது 1 பில்லியன் அமெரிக்க டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பெரும்பாலான ஒப்புதல்களைப் பெற்றிருந்தாலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் உயர் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட தாமதங்களை நிறுவனம் காரணம் காட்டி, விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய குழுக்களுக்கு இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தாலும், இலங்கையிலிருந்து மரியாதையுடன் விலக முடிவு செய்துள்ளதாக அதானி குழுமம் இலங்கை முதலீட்டு வாரியத்திற்கு (BoI) தெரிவித்துள்ளது.

இருப்பினும், இலங்கை அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை.

புது தில்லிக்கு சமீபத்தில் சென்றிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் அவரது குழுவினரும் அதானி திட்டம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் விவாதித்தனர். ஆனால் அதானி மேற்கோள் காட்டிய கட்டணம் மிக அதிகமாக உள்ளது என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருந்தார்.

இந்திய தரப்பு இந்த விவகாரம் குறித்து மீண்டும் விவாதங்களுக்குத் தயாராக இருப்பதாகக் கூறியது.

அதானி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருப்பதாகவும், அதன் பிறகுதான் மேலும் முடிவெடுப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அப்போது கூறியிருந்தது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது!

Pagetamil

யாழ் மாநகரசபையில் மணிவண்ணன் தரப்பின் வேட்புமனு நிராகரிப்பு: யாழில் சங்கின் நிலை பரிதாபம்!

Pagetamil

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையில் புதிய கூட்டு!

Pagetamil

பிணை இல்லை: தென்னக்கோனுக்கு ஏப்ரல் 3 வரை விளக்கமறியல்!

Pagetamil

மே 6ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல்!

Pagetamil

Leave a Comment