மரக்கட்டைகள் விழுந்ததில் ஒருவர் பலி

Date:

வஸ்கடுவ – கபுஹேன பகுதியில் மரக்கட்டைகள் வீழ்ந்ததில் ஒருவர் பலியாகிய சம்பவம் பதிவாகியுள்ளது.

லொறியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மரக்கட்டைகள் தவறி விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தம் அப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, உயிரிழந்தவர் எகொட உயன பகுதியை சேர்ந்த 48 வயதான கிரிஷாந்த குமார என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லொறியில் இருந்து மரக்கட்டைகளை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பலகைகள் அவரது மீது விழுந்ததில் கடுமையாக காயமடைந்ததாகவும் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர். உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாணதுறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்