தொடரூந்தை இடைநடுவே நிறுத்தி ஓட்டுநர் மாயம்

Date:

தொடரூந்தை இடைநடுவே நிறுத்தி ஓட்டுநர் மாயமானதால் குறித்த ஓட்டுநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி சென்று கொண்டிருந்த தொடரூந்து எண் 50ன் ஓட்டுநர் திடீரென இடைநடுவே மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் காரணமாக, குறித்த தொடரூந்தில் பயணம் செய்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

நேற்று முன்தினம் (06) மதியம், குறித்த தொடரூந்து கொக்கல புகையிரத நிலையத்தை வந்தடைந்தபோது, ஓட்டுநர் திடீரென தனது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தலைமை ஓட்டுநர் அதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் தொடரூந்தை நிறுத்திவிட்டு காணாமல் போனதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்திற்குப் பின்னர், குறித்த ஓட்டுநரை தொடர்புகொள்ள முடியாமல் போன நிலையில், சில மணி நேரம் கழித்து வந்த கொக்கல நிலைய அதிகாரி தொடருந்தில் இருந்த பயணிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்மீது ஒழுங்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இச்சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்படும் என தொடருந்து துணைப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது....

இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த கோயிலுக்குள் நுழைவதென்றால் பசு சாணம், சிறுநீர் உட்கொள்ள வேண்டும்!

உத்​த​ராகண்​டில் சார் தாம் யாத்​திரை தொடங்​கி​யுள்ள நிலை​யில், இந்து அல்​லாதவர்​கள் கோயிலுக்​குள்...

ஆசிய கடற்பரப்பில் 3 ஈரானிய கப்பல்களை இடைமறித்துள்ள அமெரிக்க கடற்படை

ஆசியக் கடற்பரப்பில் ஈரான் கொடியுடன் சென்ற குறைந்தது மூன்று எண்ணெய்க் கப்பல்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்