கட்டுநாயக்க விமான நிலையத்தில் 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, அவர் தனது உடமைகளுடன் சாக்லெட் பொதிகள் போல் பொதி செய்து இந்த போதைப்பொருளை கடத்த முயன்றமை தெரியவந்ததுள்ளது.
கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த 45 வயதான வியாபாரி என்பதுடன், அவரிடம் இருந்து 1 கிலோ 40 கிராம் குஷ் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.




