மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

Date:

மாதம்பை பழைய நகர் பகுதியில் உள்ள வீடொன்றில், கணவரின் கூரிய ஆயுதத் தாக்குதலில் பெண்ணொருவரும் ஆணொருவரும் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த இருவரும் ஹலாவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (28) தாக்குதலுக்குள்ளான ஆண் உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த பெண் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் மாதம்பை பழைய நகரைச் சேர்ந்த 60 வயதுடைய துஷார தில்ருக்ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த நபர், சந்தேகநபரின் மனைவியுடன் சில காலமாக உறவில் இருந்ததாகவும், சம்பவத்தன்று இருவரும் வீட்டொன்றில் தங்கியிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தன்று, தனது மனைவியை வீட்டில் ஆணொருவருடன் காண நேர்ந்த சந்தேகநபர், இருவரையும் கத்தியால் தாக்கி காயப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் வெட்டிக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், மாதம்பை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்