திருகோணமலையில் தேர்தல் செலவறிக்கை சமர்ப்பிக்காதவர்களுக்கு வழக்கு

Date:

கடந்த ஆண்டு (2024) பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பலர் தமது செலவறிக்கையை குறித்த நேரத்திற்குள் சமர்ப்பிக்காத காரணத்தால், திருகோணமலை குற்றப்புலனாய்வு பணியகம் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இவ்வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (28) திருகோணமலை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட 17 அபேட்சகர்கள் மற்றும் கட்சி செயாலாளர்கள், சுயேட்சைக் குழு தலைவர்கள் உட்பட 9 பேருக்கு எதிராக இது தொடரப்பட்டுள்ளது.

திருகோணமலை குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பிரதம பொலிஸ் பரிசோதகர் எம். எஸ். நஜீம் தலைமையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

28 வயது காதலனுக்காக குழந்தையை வீதியில் விட்டுச்சென்ற 38 வயது தாய்

வத்தேகம பொலிஸ் பிரிவின் யதிரவன பகுதியில் உள்ள ஒரு குறுக்குச் சாலையில்,...

ஷிரான் பாசிக் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கைது செய்யப்பட்ட, இலங்கையின் முக்கிய போதைப்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்