25.9 C
Jaffna
February 16, 2025
Pagetamil
இலங்கை

கல்கேம கோவிலில் மேலும் இரண்டு உயிருள்ள கைக்குண்டுகள் மீட்பு

பெலியத்த, நிஹலுவவில் அமைந்துள்ள கல்கேம கோவிலிலிருந்து நேற்று (28) மேலும் இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், இதுவரை கோவிலிலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டுகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து கைக்குண்டுகளும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட உயிருள்ள குண்டுகளாகும். சமீபத்தில், கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு கிணற்றை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, பொலிஸார் மேலும் இரண்டு கைக்குண்டுகளைக் கண்டுபிடித்ததுடன் தொடர் தேடுதல்களின்போது, மேலும் இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் எச்சரிக்கை : திருகோணமலையும் அடக்கம்

east tamil

மியன்மார் சைபர் குற்ற முகாமில் இருந்து 13 இலங்கையர்கள் மீட்பு

east tamil

கனேடிய பெண் கட்டுநாயக்கவில் கைது

east tamil

மாங்குளத்தில் செய்தியாளருக்கு கொலை மிரட்டல்: கள்ளமண்காரர் அட்டகாசம்!

Pagetamil

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு விபத்து

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!