கனேடிய பெண் கட்டுநாயக்கவில் கைது

Date:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 36 கோடி ரூபாய் பெறுமதியான “ஹஷிஷ்” போதைப்பொருளுடன் கனேடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் டொராண்டோவில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகர வழியாக நேற்று (15.02.2025) இரவு இலங்கைக்கு வந்தபோது, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க அதிகாரிகளுக்குக் கிடைத்த சர்வதேச புலனாய்வு தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 36 வயதான இந்த கனேடிய பெண்ணின் இரண்டு பயணப்பைகளில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 36.5 கிலோ “ஹஷிஷ்” போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட குறித்த கனேடிய பெண் கடுமையாக போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அவர் கொண்டு வந்த போதைப்பொருள் இலங்கையில் பதுக்கி வைக்கப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுவதற்கான நிகழ்வாக இருக்கலாம் என்றும் சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவிலுள்ள காதலியை தேடி வந்த பாகிஸ்தான் இளைஞன் கைது!

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காதலியை கரம்​பிடிக்க, பாகிஸ்தானின்...

வேலை வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் கைது!

வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்று, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தவெக...

அமித்ஷாவுடன் சந்திப்பு… பாஜக தலைவரிடம் இராஜினாமா கடிதத்தை கையளித்த அண்ணாமலை!

பாஜக​வில் இருந்து வில​கு​வ​தாக தேசி​யத் தலை​வர் நிதின் நவீனை டெல்​லி​யில் சந்​தித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்