இந்தியாவிலுள்ள காதலியை தேடி வந்த பாகிஸ்தான் இளைஞன் கைது!

Date:

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காதலியை கரம்​பிடிக்க, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரை சேர்ந்த இளைஞர் எல்லை தாண்டி காஷ்மீருக்​குள் நுழைந்​தார். இந்​திய ராணுவ வீரர்​கள், அவரை சுற்றி வளைத்​துப் பிடித்​தனர்.

பாகிஸ்தான் காஷ்மீரின் முசாப​ரா​பாத் அருகே உள்ள பைன்​காடியை சேர்ந்​தவர் ஜீஷான் அகமது மிர். அவருக்​கும் இந்தியாவின் காஷ்மீரின் உரி அருகே உள்ள துல்​வாரி கிராமத்​தைச் சேர்ந்த இரும் பானுவுக்கும் இடையே சமூக வலை​தளம் வாயி​லாக பழக்​கம் ஏற்பட்​டது. நாளடைவில் இரு​வருக்​கும் இடையே காதல் மலர்ந்​தது. தனது காதலியை சந்​திப்​ப​தற்​காக ஜீஷான் அகமது மிர் பாகிஸ்தான் காஷ்மீரில் இருந்து நேற்று முன்​தினம் காலை இந்திய காஷ்மீரின் உரி மாவட்​டம், சிலிகோட் பகு​திக்​குள் நுழைந்​தார். இந்​திய ராணுவ வீரர்​கள், அவரை சுற்றி வளைத்​துப் பிடித்​தனர்.

ராணுவ வீரர்​களிடம் ஜீஷான் அகமது மிர் அளித்த வாக்​கு மூலத்தில், ”எனது முன்​னோர் காஷ்மீரின் துல்​வாரி கிராமத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஆவர். அந்த பகு​தியை சேர்ந்​தவர் என்​ப​தால் இரும் பானுவுடன் சமூக வலை​ தளத்​தில் பழக்​கம் ஏற்​பட்​டது. அவரை திரு​மணம் செய்ய எல்லை​யைக் கடந்து இந்​தி​யா​வுக்​குள் நுழைந்தேன். நான் இந்​தி​யா​வில் வாழ விரும்​பு​கிறேன்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து காஷ்மீர் போலீ​ஸாரிடம் ஜீஷான் அகமது மிர் ஒப்​படைக்​கப்​பட்​டார். அவரிடம் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். சம்​பந்​தப்​பட்ட பெண்​ணிட​மும் காஷ்மீர் போலீ​ஸார் விசாரணை நடத்தி வரு​கின்​றனர். இந்த விவ​காரம் தொடர்​பாக மத்​திய உளவு அமைப்​பு​கள்​ தனி​யாக வி​சா​ரணை நடத்​தி வருகின்​றன.

spot_imgspot_img

More like this
Related

விகாரைக்குள் ‘கசமுசா’: மற்றொரு மன்மதராசா சிக்கினார்!

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி...

தடுப்புக்காவலில் உள்ள சுரேஷ் சாலேவுக்கு மனநோயாம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தற்போது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபய வெளிநாடு செல்ல தடை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தொடர் விசாரணையின் காரணமாக, முன்னாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்