குச்சவெளியில் கடையில் நின்ற பெண்ணின் சங்கிலியை பறித்த திருட்டுக் கும்பல்

Date:

[embedyt] https://www.youtube.com/watch?v=eu3TZ4XUrAk[/embedyt]

திருகோணமலை, குச்சவெளி – கும்புறுபிட்டி பகுதியில் இன்று (15.02.2025) பகல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

கும்புறுபிட்டியில் உள்ள ஒரு கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து நின்ற கும்பல், கடைக்கார பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை திடீரென பறித்து கொண்டு சென்றுள்ளனர்.

அச்சத்துடன் கூடிய பெண் உடனடியாக உதவிக்காக கூச்சல் விட, அருகிலிருந்தோர் திருட்டு கும்பலை பிடிக்க முயன்றனர். எனினும், அவர்கள் வேகமாக ஓடிச் சென்று மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடையில் இருந்த கண்காணிப்பு கமெரா (CCTV) பதிவுகள் சேகரிக்கப்பட்டு, திருடர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும், சந்தேகத்திற்கிடமான நபர்களைப் பற்றி உடனடியாக காவல்துறையை அறிவிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எட்டயபுரம் அருகே இலங்கைத் தமிழர்கள் – கிராம மக்கள் இடையே மோதல்

எட்​டயபுரம் அருகே குளத்​துள்​வாள்​பட்​டி​யில் கிராம மக்​களுக்​கும், இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமைச்...

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!

ஈரானின் இராணுவம் சனிக்கிழமையன்று ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியதாக அறிவித்தது. இதைத்...

அதிக வெப்பத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி?

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்