திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் ஆசாத்நகர் கிராமத்தை அண்மித்த பகுதியில் இன்று (24) சற்று முன்பு மேலுமொரு விபத்து பதிவாகியுள்ளது.
இது குறித்த ஆரம்ப கட்ட விசாரணைகளில், குறித்த இவ் விபத்து ஏற்பட சாரதியின் தூக்க நிலையே காரணம் என தெரிய வந்துள்ளது.
இவ் விபத்து தொடர்பாக அந்த பகுதியில் உள்ள பொலிஸாரின் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். விபத்து காரணங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து மேலும் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.






