பேரறிவாளன் சட்டப்படி வழக்கறிஞராக பதிவு செய்ததில் என்ன தவறு? – நீதிபதிகள் கேள்வி

Date:

‘பேரறிவாளன் சட்​டப்​படி தன்னை வழக்​கறிஞ​ராகப் பதிவு செய்து கொண்​ட​தில் என்ன தவறு உள்​ளது? ’ என உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

முன்​னாள் பிரதமர் ராஜீவ்​காந்தி கொலை வழக்​கில் கைதாகி 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக சிறை தண்​டனையை அனுப​வித்த பேரறி​வாளன், கடந்த 2022-ம் ஆண்டு உச்ச நீதிமன்​றத்​தால் விடுவிக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில் அவர் சட்​டப்​படிப்பு படித்​து, கடந்த ஏப்​.24 அன்று தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சிலில் தன்னை வழக்​கறிஞ​ராகப் பதிவு செய்து கொண்டார்.

இந்​நிலை​யில், பேரறி​வாளனை வழக்​கறிஞ​ராக பதிவு செய்​ததை எதிர்த்து காங்​கிரஸ் எம்​பி ஆர்​.சு​தா, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அதில், பேரறி​வாளன் கருணை அடிப்​படை​யில் உச்ச நீதி​மன்​றத்​தால் விடுவிக்​கப்​பட்​டுள்​ளாரேயன்​றி, குற்​ற​வாளி இல்லை என கூறப்படவில்லை.

மேலும், குற்ற வழக்​கு​களில் சிறை தண்​டனையை அனுபவிக்​கும் குற்​ற​வாளி​கள் விடு​தலை​யான 2 ஆண்​டு​களுக்​குப் பிறகு வழக்​கறிஞ​ராக தங்​களைப் பதிவுசெய்து கொள்ள அனு​ம​திக்​கும் வழக்​கறிஞர் சட்​டப்​பிரிவை​யும் சட்​ட​விரோத​மானது என அறி​வித்து அதை ரத்து செய்ய வேண்​டும். பேரறி​வாளனை வழக்​கறிஞ​ராகப் பதிவு செய்​தது தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்​கு உத்​தர​விட வேண்​டும் என கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், குற்ற வழக்​கில் சிறை தண்​டனை அனுப​வித்து விடு​தலை ஆன 2 ஆண்​டு​களுக்​குப் பிறகு வழக்​கறிஞ​ராகப் பதிவு செய்து கொள்​ளலாம் என வழக்​கறிஞர்​கள் சட்​டம் அனு​ம​திக்​கும்​போது, பேரறி​வாளன் தன்னை வழக்​கறிஞ​ராகப் பதிவு செய்து கொண்​ட​தில் என்ன தவறு என கேள்வி எழுப்​பினர்.

பின்​னர் இந்த வழக்​கில் சிபிஐ விசா​ரணை கோரு​வது ஏற்​புடையதல்ல என்​ப​தால், வழக்​கில் இருந்து சிபிஐ-யை நீக்க மனு​தா​ரருக்கு உத்​தர​விட்​டனர். அத்​துடன் இந்த வழக்​கில் அகில இந்​திய பார் கவுன்​சில் மற்​றும் தமிழ்​நாடு பார் கவுன்​சில் உள்​ளிட்​டோர் பதிலளிக்க 4 வார காலம் அவகாசம்​ வழங்​கி வி​சா​ரணை​யை தள்​ளி​வைத்​துள்​ளனர்​.

spot_imgspot_img

More like this
Related

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

அப்பாச்சி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க இராணுவம்...

கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் கனடாவின் பிராம்டன் நகர மேயர்!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான சொல்லிசை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்