யானையின் தாக்குதலால் வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

Date:

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 42 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (24) மாலை திருகோணமலை கம்பகொட்ட பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் திருகோணமலை, எத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த சின்தக விமலசேன எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் வயல் காவலுக்கு சென்ற வேளையில் யானை வயலுக்குள் நின்ற நின்றிருந்தது. இதன் போது, யானையை விரட்ட முற்பட்ட வேளையிலே, யானை துரத்தி தாக்கியதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கைதிலிருந்து தப்பிக்க நீதிமன்றம் சென்ற டிஐஜி வருண ஜெயசுந்தர

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் தொடர்பாக,...

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல்...

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்