ஐஸ் போதைப்பொருள்களுடன் இருவர் கைது

Date:

களுத்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு, ஐஸ் போதைப்பொருள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என களுத்துறை குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டவர்களில் இருவரும், முறையே 38 மற்றும் 39 வயதுடையவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய ஐந்து மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு போதைப்பொருள் வியாபாரி ஒருவருக்கு போதைப்பொருள் விநியோகம் செய்துள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் ஏதேனும் திருடப்பட்டவையா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தகவல் வழங்கியுள்ளார்.

இந்நடவடிக்கை தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை : புலமைப்பரிசில் பரீட்சையில் 48 மாணவர்கள் சித்தி

கல்முனை கல்வி வலய காரைதீவு கல்விக் கோட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்