நானுஓயாவில் குடும்ப தகராறு – ஒருவர் பலி

Date:

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் 14ம் திகதி பொங்கல் தினத்தில் ராமர் பஜனை ஊர்வலத்தில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக, 45 வயதான மாணிக்கம் யோகேஸ்வரன் கூரிய ஆயுதம் மூலம் தாக்கப்பட்டு, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது, 20ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக, பழைய பகை காரணமாக பொங்கல் தினத்தில் ஏற்பட்ட சிறு வாய்த்தர்க்கம், பின்னர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதென தொடக்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வர் நுவரெலியாவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலிஸாரின் விசாரணையின் போது சம்பவம் தொடர்பான 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளது. அவர்களை நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 29ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

போதை பொருள் வியாபாரியிடம் பணம் அவரது மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) பணிநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக...

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது—மட்டு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினரான இளைய தளபதி நாமல் ராஜபக்ஷவை கைது செய்தது ஜனநாயகத்துக்கு...

காதலியை கொடூரமாக கொலை செய்த பின் உயிரை மாய்த்த காதலன்!

வத்தளை, பல்லியவத்தை, தன் லங்கா வீதியில் உள்ள ஒரு வீட்டில், பதினெட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்