சிறு உற்பத்தி பொருட்களின் விலைகள் குறையலாம் – சிறுதொழில் வல்லுநர் சங்கம்

Date:

மின்சாரக் கட்டணக் குறைப்புக்குப் பிறகு அடுத்த இரண்டு வாரங்களில் சந்தையில் உள்ள பொருட்களின் விலைகள் குறையும் என்று அகில இலங்கை சிறுதொழில் வல்லுநர் சங்கம் அறிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்கும் தீர்மானத்தை பொதுப் பயன்பாட்டு ஆணையம் மேற்கொண்டதோடு, இது ஜனவரி 17 முதல் அமலுக்கு வந்துள்ளதாக சங்கத் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்தார்.

இது தொடங்கிய நாளிலிருந்தே உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான மின்சாரச் செலவுகள் கணிசமாக குறைந்துள்ளதாகவும், இதனால் பொருட்களின் விலை 5% முதல் 10% வரை குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, குறைந்த மின்சாரச் செலவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் சுமார் இரண்டு வாரங்களில் சந்தையில் கிடைக்கும், இதன்மூலம் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

சிறுதொழில் வல்லுநர்கள், இந்த மாற்றம் நிலையானதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு, குறைவான உற்பத்தி செலவுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமாக அமையும் எனவும் தெரிவித்தனர்

spot_imgspot_img

More like this
Related

போதை பொருள் வியாபாரியிடம் பணம் அவரது மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) பணிநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக...

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது—மட்டு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினரான இளைய தளபதி நாமல் ராஜபக்ஷவை கைது செய்தது ஜனநாயகத்துக்கு...

காதலியை கொடூரமாக கொலை செய்த பின் உயிரை மாய்த்த காதலன்!

வத்தளை, பல்லியவத்தை, தன் லங்கா வீதியில் உள்ள ஒரு வீட்டில், பதினெட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்