நாளை முதல் மழை பெய்யும்!

Date:

கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை (18) முதல் மழையுடன் கூடிய காலநிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படக்கூடிய சேதங்களுக்கு எதிராக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

7k casino обзор платформы.1030

7k casino обзор платформы ...

Online gambling uden dansk regulering.380

Online gambling uden dansk regulering ...

Uudet verovapaat nettikasinot Suomessa.1616

Uudet verovapaat nettikasinot Suomessa ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்