மனைவியின் காதை வெட்டிய கணவனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

Date:

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டிய கணவனை, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

விவரங்களைப் பார்ப்பதற்குச் சென்று, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவனின் சித்திரவதை தாங்க முடியாமல் சண்டிலிப்பாயில் உறவினரின் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 07.01.2025 அன்று மனைவியின் வீட்டுக்கு சென்ற சந்தேகநபர், மனைவியின் காதினை வெட்டியதுடன், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர், நேற்று முன்தினம் (10.01.2025) மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

மேலும், இந்த சந்தேகநபருக்கு எதிராக மற்றுமொரு சில முறைப்பாடுகள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திலும் உள்ளன. இதுவரை நடந்த விசாரணைகளில் அவர் மனைவியின் தலை, காலை உடைத்த சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நேற்று முன்தினம் (10.01.2025) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நேற்று (11.01.2025) மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிவான், அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

‘திருடினால் சிறைதான்’: ஜேவிபி செயலாளர்!

பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் சார்பு அல்லது...

இலங்கையை விட்டு எஸ்கேப் ஆன முன்னாள் அமைச்சர் சொக்கமல்லி

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர என்ற சொக்க மல்லி நாட்டை...

போதை பொருள் வியாபாரியிடம் பணம் அவரது மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) பணிநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்