திருகோணமலையில் சதுப்புநிலங்கள் பாதுகாத்தல் தொடர்பான செயலமர்வு

Date:

சதுப்புநிலங்கள் மற்றும் காடுகளை மீளமைத்தல் மற்றும் அவற்றை பாதுகாத்தல் தொடர்பாக முக்கிய பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு இன்று (07.01.2025) திருகோணமலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை PROCLIME நிறுவனம் ஏற்பாடு செய்திருந்ததுடன், கிழக்கு மாகாண ஆளுநர் திரு. ஜெயந்த லால் ரத்னசேகர மற்றும் பல முக்கிய தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

சதுப்புநிலங்கள் மற்றும் காடுகளின் சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தல், அவற்றின் மீளமைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளை விளக்கல், பங்கு கொண்டவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கல் என்பன இந்த செயலமர்வின் பிரதான நோக்கங்களாகுமென தெரிவிக்கப்பட்டது.

செயலமர்வின் போது முக்கியமாக, காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் பற்றிய அறியப்பட்ட உண்மைகள், சுற்றுச்சூழல் மாற்றங்களின் தாக்கம், மீளமைப்பு திட்டங்களின் செயல்திட்டங்கள், பங்கு கொள்ளும் சமூக அமைப்புகளின் தாராள பங்களிப்பு ஆகியவை விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த முயற்சியால், கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் ஆர்வம் மற்றும் செயற்பாடு மேம்படும் என எதிர்பார்க்கப்படும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்,

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்