2006 ஆம் ஆண்டு திருகோணமலை பிரதான கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல் இன்று மாலை 6 மணி அளவில் திருக்கோணமலை பிரதான கடற்கரையில் இடம் பெற்றது.
இதன்போது திருகோணமலையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர், மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அத்துடன் ஒரு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




