கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Date:

கசிப்பு குடிக்க முந்நூறு ரூபாவை தரவில்லை என மனைவியுடன் தகராறு செய்து, அவரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த நபரொருவர் வீட்டின் பின்புறமுள்ள முந்திரி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குளியாபிட்டிய எத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த  37 வயதுடைய  சாமினி லக்சிகா சேனாநாயக்க என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது கணவர் 42 வயதான அமில ரணசிங்க என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சில காலமாக தனித்தனியாக வாழ்ந்து வந்த தம்பதியினர், சில காலத்தின் முன்னர் மீண்டும் ஒன்றாக வாழத் தொடங்கினர். அவர்களுக்கு  14 வயது மகன் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்காத பொலிசார் மீது நடவடிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ்...

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்