தனது வாழ்வில் தொழிலாளர் சமூகத்தின் மேம்பாட்டிற்காக முக்கியமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டவரும், தொழிலாளர் உரிமைகளுக்காக போராட்டங்கள் பல ஆற்றிய அமரர் பெ. சந்திரசேகரனின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரை நினைவுகூரும் முகமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்து.
குறித்த அஞ்சலி நிகழ்வையொட்டி, தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் ட்ரூப் விநாயகர் ஆலயத்துக்கான இராஜகோபுர புனருத்தான பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன் அமரர் சந்திரசேகரனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




