காலி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் தகவலின்படி, மிட்டியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்வத்த சுமணராம விகாரை வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்த நபர் ஒருவர் இன்று (21) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவ தெல்வத்த போயாகொட வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை வாக்களிப்பு நிலையத்திற்கு வந்த அவர், தனது வாக்குச்சீட்டை பெற்றுக்கொண்டு வாக்களித்த பின்னர், அதனை புகைப்படம் எடுக்கும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



