சிறிதரன் செய்தால் குற்றமில்லை… சுமந்திரன் செய்தால்த்தான் குற்றம்: விளக்கமில்லாமல் உளறிய வட்டிக்கடை ஜீவன்!

Date:

விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என விளக்கமில்லாமல் பேசியுள்ளார் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் சிறிதரன் அணி உறுப்பினருமான வட்டிக்கடை ஜீவன் என அழைக்கப்படும் சண்முகம் ஜீவராஜ்.

தமிழரசுக் கட்சியின் தலைவர், புதிதாக தெரிவான தலைவர் உள்ளிட்ட பலர் இல்லாத கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சிக் கிளைகள் பொது வேட்பாளரை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது.

விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2010ம் ஆண்டு எவ்வாறு சுமந்திரன் எப்படி தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் தெரியாமல் வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சிக்காலத்தில் 1000 விகாரை அமைக்க சஜித் பிரேமதாச நிதியொதுக்கினார். அதன் பின்னர் 2019 ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்டார். அப்போது, வட்டிக்கடை ஜீவனின் அணித்தலைவரான சி.சிறிதரன் உள்ளிட்டவர்களும் சஜித்தையே ஆதரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

‘திருடினால் சிறைதான்’: ஜேவிபி செயலாளர்!

பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் சார்பு அல்லது...

இலங்கையை விட்டு எஸ்கேப் ஆன முன்னாள் அமைச்சர் சொக்கமல்லி

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர என்ற சொக்க மல்லி நாட்டை...

போதை பொருள் வியாபாரியிடம் பணம் அவரது மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) பணிநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்