தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை எடுப்பதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (24) வவுனியாவில் ரெலோவின் மத்தியகுழு கூட்டத்தின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
பொதுவேட்பாளர் தரப்பிலிருந்து ரெலோ விலகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், மத்தியகுழு கூட்டத்தில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதவிர, பொதுவேட்பாளரை நிறுத்திய தரப்புக்களுடன் அவசரமாக சந்திப்புக்கும் ரெலோ நேரம் கோரியுள்ளது. அனேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் இந்த சந்திப்பு நடக்கும்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.



