கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

Date:

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பகல் வேளையில் மனித உடல் உணரும் வெப்பநிலையை குறிக்கும் வெப்பச் சுட்டெண் (Heat Index) சில பகுதிகளில் ‘எச்சரிக்கை (Caution)’ மட்டத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும், நாளின் அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் கடுமையான வெளிப்புற உடல் உழைப்புகளை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவோர் வெப்பத்தால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்