ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் கோரிக்கையை நிராகரித்தனர் பொதுவேட்பாளர் குழுவினர்!

Date:

தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரனின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை, பொதுவேட்பாளர் ஏற்பாட்டுக்குழுவினர் நிராகரித்துள்ளனர்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13வது திருத்த விவகாரமும் உள்ளடக்கப்பட வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட யோசனையை, சிவில் சமூகமென்ற பெயரில் பொதுவேட்பாளர் ஏற்பாட்டுக்குழுவில் உள்ள பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதும் குழுவினர் நிராகரித்துள்ளனர்.

இதேவேளை, துண்டுப்பிரசும் அச்சிடுவதிலும் இரு தரப்புக்குமிடையில் உரசல் ஏற்பட்டுள்ளது.

நேற்று (23) கிளிநொச்சியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினர் பொதுவேட்பாளருக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்திருந்தனர். இந்த துண்டுப்பிரசுரங்களை வடிவமைத்து விட்டு, யாழ்ப்பாணத்திலுள்ள கட்டுரையாளர்களின் பார்வைக்கு அனுப்பிய போது, அந்த துண்டு பிரசுரத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென பொதுவேட்பாளர் ஏற்பாட்டுக்குழுவிலுள்ள கட்டுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பினர் எந்த திருத்தமும் செய்யாமல் அந்த பிரசுரங்களை அச்சிட்டு விநியோகித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘கணினிப் பிழை’ காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 263 மில்லியன் தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது: நாமல்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை...

பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது...

7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்த தாக்கம்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்