காலியாகிறதா மஹிந்த கூடாரம்?

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் 75 பேர் நேற்று (29) பிற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  வஜிர அபேவர்தனவின் கொழும்பு இல்லம் மற்றும் கட்சி அலுவலகத்திற்குச் சென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.

இந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களில் பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரன, கனக ஹேரத், ஜனக வக்கம்புர, மொஹான் பிரதர்ஷன உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பொதுஜன பெரமுனவில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான நூற்றைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன தனியான ஜனாதிபதி வேட்பாளரை முன்வைப்பதற்கான தீர்மானத்துடன், சமகி ஜன பலவேகவின் ஜனாதிபதிக்கு ஆதரவை தெரிவிக்கத் தயாராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பயணம் வேகமெடுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்