தெல்லிப்பளை மகாஜனவில் மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு!

Date:

தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர், பாடசாலையில் ஆசிரியர் தாக்கியதால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் தெரிவித்தனர்.

தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனை ஆசிரியர் தாக்கியதாகவும், இதனால் மாணவனின் காதுப்பகுதி பாதிக்கப்பட்டதாகவும், மாணவனின் பெற்றோர் தெரிவித்தனர்.

காதுப்பகுதி சிவந்து வீங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், மாணவனின் காது பாதிக்கப்பட்டதாகவும் பெற்றோர் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.

வகுப்பறையில் நடந்த விவகாரமொன்றையடுத்து மாணவனை இழுத்துச் சென்று ஆசிரியர் தாக்கியதாக மாணவனின் பெற்றோர் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்