பொலனறுவை பக்கமுன கிரித்தலை பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிக்கப்பிட்டிய பகுதியை சேர்ந்த லகிது பின்சர என்ற 18 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிலில் பயணித்த போது லொறியுடன் மோதியதில் இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிசார் மேலதிக தகவல்களை முன்னெடுத்து வருக்கின்றனர்.



