சுமார் 10 பில்லியன் டொலர் இருதரப்பு கடனை மறுசீரமைப்பதற்காக சீனா மற்றும் பிற கடன் வழங்கும் நாடுகளுடன் இலங்கை செய்துகொண்ட ஒப்பந்தங்கள் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதை நோக்கி ஒரு படி நெருக்கமாக கொண்டு வந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட பணிக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர், “எதிர்காலத்தில் வெளிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தங்களை எட்டுவதில் விரைவான முன்னேற்றம் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று நேற்றைய தினம் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கடனில் மூழ்கி வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கை கடனை அடைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுள்ள நிலையிலும் , srilanka ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் நாட்டின் வங்குரோத்தை துணிந்து இறங்கி செயற்பட்டு மீட்டு வருவதாக கூறிவரும் நிலையிலும் , கடனை தீர்த்து கட்டுவதற்கு இன்னும் நிதி உதவிகள் தேவைப்படுவதாக இலங்கை ஜனதிபதி தெரிவித்து வரும் நிலையிலும் IMF இவ்வாறு தெரிவித்துள்ளது.




