திருகோணமலையிலிருந்து இருந்து கொழும்பு நோக்கி பயணித்து ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று (11) இரவு திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு 7 மணி ரயிலில் மோதியே ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்தவர் திருகோணமலை கணேஷ் லேன் பகுதியைச் சேர்ந்த முஹம்மது ஆரிப் (வயது 53) என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-ரவ்பீக் பாயிஸ்-




