நான் சுமந்திரனின் ஊதுகுழலல்ல!

Date:

சுமந்திரனின் ஊது குழல் நான் அல்ல என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்பாடு செய்துள்ள பொது வேட்பாளர் சாதக பாதக நிலைமைகள் தொடர்பில் ஆராயும் கருத்துப் பிரிமாற்றம் என்பது சதி நடவடிக்கை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

இவ்வாறு நடைபெறுவதாக ஊடகங்களில் தான் நானும் பார்த்தேன். எனக்கென்டால் இதைப் பற்றி எதுவும் தெரியாது. என்னுடன் எதுவும் சுமந்திரன் கதைக்கவும் இல்லை. இது தொடர்பில் எதுவும் சொல்லவும் இல்லை.

ஆனால் ஊடகங்களில் பார்த்த போது இரண்டு தரப்பு கருத்துக்களும் பகிரப்படுவதாகத் தான் இருக்கிறது. அப்படி செய்யலாம் தானே. எந்தவொரு விடயத்திற்கும் இரண்டு பக்க கருத்துக்கள் இருக்கும். இது இரண்டு அணிகள் என்றில்லை. இரு வேறு கருத்துக்கள் நிலைப்பாடுகள் தான் இருக்கிறது.

மேலும் அப்படி அணிகள் என்றால் எங்கட கட்சிக்குள் தான் இருக்கிறது. இந்த விடயத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கூட தங்கள் கருத்துக்களை சொல்லி இருக்கின்றனர். அது தவறு என்று சொல்லவில்லை. அவ்வாறு தங்கள் தங்கள் கருத்துக்களை சொல்வது அவர்களது உரிமை.

என்னைப் பொறுத்தவரையில் வேட்பாளர் தெரிவிலேயே இது முடங்கும் என்று நான் முதலிலேயே சொல்லியிருந்தேன். அப்படி நான் கூறி பல நாட்களின் பின்னர் தான் சுமந்திரன் கூட இந்தக் கருத்தை கூறியிருந்தார். ஆனால் இப்ப நான் இதனை கூறினால் சுமந்திரன் சொல்வதை நான் கூறுவதாகவும் சுமந்திரனின் ஊதுகுழல் என்றும் என்னை சொல்லுவார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல. நான் அவருக்கு குழல் ஊதவில்லை. அதேநேரம் என்னைக் கேட்டும் சுமந்திரன் இதை பேசவும் இல்லை. அவருடைய கருத்தோ என்னுடைய கருத்தோ எதுவாகவும் இருக்கலாம். அதே நேரம். மக்களின் கருத்து மாறுபட்டும் இருக்கலாம். அதற்காக கருத்து வேறுபாடுகள் இல்லாமலும் இல்லை என்றார்.

spot_imgspot_img

More like this
Related

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...

யாழில் மகளை சீரழித்த தந்தைக்கு வழங்கப்பட்ட தண்டனை

யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்