நினைவேந்தலை தடுப்பது நல்லிணக்கத்திற்கு அடிக்கும் சாவு மணியே – முன்னாள் எம்பி சந்திரகுமார்.

Date:

சர்வதேசத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட நிலைமாறுகால நீதி
பொறிமுறையில் நினைவேந்தல் மிக முக்கிய பகுதியாகும்.எனவே அந்த நினைவேந்தல்
நிகழ்வை கூட தமிழ் மக்கள் மேற்கொள்ள முடியாத படி அரசும் அதன் கட்டமைப்பான
பொலீஸாரும் மேற்கொள்ளும் தடை நடவடிக்கைகள் இந்த நாட்டின் நல்லிணக்கத்தின்
மீது அடிக்கும் சாவு மணியே, என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,
சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார்
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்-

2009 இல் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டார்கள், கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து தங்களை ஆற்றுப்படுத்திக்கொள்வதற்கு கூட முடியாத அளவுக்கு இலங்கையில் தமிழ் மக்கள் மீது அடக்கு முறை பிரயோகிக்கப்படுகிறது.தெற்கிற்கு ஒரு நீதி வடக்கிற்கு ஒரு நீதி என்ற நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் மீதான் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்த சிறிய தீவில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய அரசும் அதன் கட்டமைப்பு பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது ஒரு காலமும் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படாத போது இலங்கையில் ஒரு போதும் நிலையான சமாதானம் ஏற்படாது.

யுத்தம் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகின்ற போதும் இனங்களுடைக்கிடையே
இடைவெளியும் கூடிக்கொண்டே போகிறதே தவிர குறைவதாக தெரியவில்லை.
பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் உணர்வுகளை புரிந்துகொண்டு, நல்லிணக்கத்தை
வலுப்படுத்த வேண்டுமே தவிர வெற்றிப்பெற்ற மனநிலையில் இருந்து கொண்டு
தமிழ் இனத்தை கையாள்வது கவலைக்கும் கண்டனத்திற்கும் உரியது. எனவே இந்த
அரசு உடனடியாக தமிழ் மக்கள் மீதான இவ்வாறான அடக்கு முறைகளை கைவிட
வேண்டும். உறவுகளை நினைவேந்தும் உரிமைகளில் அரசோ அதன் கட்டமைப்போ
தலையிடக் கூடாது. தமிழ் மக்களை தொடர்ந்தும் காயப்படுத்தும்
செயற்பாடுகளில் ஈடுபடுவதனை நிறுத்தி நல்லிணக்கத்தை வளர்தெடுக்க
முயற்சிக்க வேண்டும் என்றும் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்