சாந்தனின் உடல் கட்டுநாயக்க விமான நிலையத்தில்

Date:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை
வழக்கில் சிறைவாசத்தின் பின் விடுதலையாகி, வைத்தியசாலையில் காலமான சாந்தன் எனப்படும் டி.சுரேந்திரராஜாவின் சடலம் இன்று (01) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பினால் விடுதலையாகிய பின்னர், அவர் தனது தாயாரைப் பார்க்க இலங்கை வரவிருந்தார்.  ஆனால் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு, இந்தியாவின் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார்.

இன்று (01) 11.35 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-122 மூலம் அவரது சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சுரேந்திரராஜாவின் உறவினர்கள் பலர் சடலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு முனையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த சடலத்தை விடுவிக்க, இந்தியாவின் சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரை பல அத்தியாவசிய ஆவணங்கள் தேவைப்படுகின்றன.

இன்று (01) பிற்பகல் 03.30 மணி வரை அந்த ஆவணங்கள் கிடைக்கப்பெறும் வரை சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்