பல்கலைக்கழக மாணவியை பகிடிவதைக்குள்ளாக்கிய 6 மாணவர்கள் கைது!

Date:

சப்ரகமுவ பல்கலைக்கழக  மாணவி ஒருவரை பகிடிவதையென்ற பெயரில் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்கள் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சமனலவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (28) கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் 23, 24 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும் அதே பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான மற்றும் மொழிக் கற்கைகள் பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பகிடிவதை தொடர்பான முறைப்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட அவசர இலக்கமான 1997க்கு கடந்த 14 ஆம் திகதி  நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 950...

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப்...

புதுக்குடியிருப்பு இளைஞனின் மரணத்துக்கு காரணம் கசிப்பா… அடியா?; சகோதரி சொன்னது உண்மையா?: பொலிசில் முறைப்பாடு!

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்