பல்கலைக்கழக மாணவியை பகிடிவதைக்குள்ளாக்கிய 6 மாணவர்கள் கைது!

Date:

சப்ரகமுவ பல்கலைக்கழக  மாணவி ஒருவரை பகிடிவதையென்ற பெயரில் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர்கள் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சமனலவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (28) கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் 23, 24 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும் அதே பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான மற்றும் மொழிக் கற்கைகள் பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பகிடிவதை தொடர்பான முறைப்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட அவசர இலக்கமான 1997க்கு கடந்த 14 ஆம் திகதி  நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்