ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சனல்-4 குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஏ.சி.எம்.ஜெயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோசா ஆகியோர் குழுவின் மற்றைய அங்கத்தவர்கள்.



