நல்லூரில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட மான்கள்: மயக்க ஊசி செலுத்தியதால் உயிரிழப்பு!

Date:

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியிலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த மூன்று மான்களுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் மூன்று மான்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர், இந்த மூன்று மான்களும் அவற்றை வளர்த்த நபருடன் கைது செய்யப்பட்டன.

பின்னர் மான்களை வாகனத்தில் கொண்டு செல்ல வசதியாக மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அவற்றில் ஒரு மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. ஏனைய இரண்டு மான்களும் பின்னர் இறந்தன.

இது தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.டி.எம்.ஈ விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்