வீடொன்றில் கட்டிலில் தீயில் சிக்கி ஊனமுற்ற ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (27) மல்வத்தை, ஹலவத்தை, இலிப்பாதெனிய பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் அங்கவீனமடைந்துள்ளதாகவும், அதன் பின்னர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு மூத்த சகோதரியுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சகோதரி சில தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த வேளையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் இருந்த படுக்கையில் தீப்பிடித்த காரணத்தால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது இதுவரை தெரியவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹலவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




