பசிலுக்கு வெள்ளையடிக்க உருவாக்கப்பட்ட குழுவிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளியேற வேண்டும்!

Date:

நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்கள் குறித்து ஆராய எதிர்க்கட்சிகள் தனியான குழுவொன்றை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகத்தை நியமிப்பதன் மூலம் அது தனது கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக வெறும் பேச்சளவிலான குழுவாகவே மாறும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் நேற்று (10) எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு நிறைவேற்று சபையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தெரிவுக்குழு தனது கடமையை நிறைவேற்றாது. பசிலுக்கு வெள்ளையடிக்கவே முயற்சிக்கும் என்பது தெளிவாகிறது. இந்த பயனற்ற குழுவிலிருந்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெளியேறி, எதிர்க்கட்சிகள் ஒருகுழுவை அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை, இந்த பயனற்ற குழுவிலிருந்து விலகுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்