அருட்பணியாளர் மாற்கு றேஜிஸ் இராசநாயகம் அவர்களின் 50ம் வருட குருத்துவ நிறைவு விழா அருட் பணி கிருபாகரன் புனித சவேரியார் குருமடம் அவர்களின் தலைமையில் கிளாலி பங்கு மக்களின் ஏற்பாட்டில் இன்று கிளாலி புனித மிக்கேல் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு வருகைப் பாடல் தியானப்பாடல் காணிக்கைப் பாடல் திரு விருந்துப் பாடல் நன்றிப் பாடல்கள் என்பன பாடப்பட்டது.
அருட் பணியாளர் மாற்கு றேஜிஸ் அடிகளாரின் 50 வது வருட குருத்துவ ஆண்டை முன்னிட்டு கேக் வெட்டி நினைவு கூரப்பட்டது.
இந்நிகழ்வில் கிளாலி புனித மிக்கேல் ஆலய பங்கு மக்கள் அருட் பணியாளர்கள் அருட்சகோதரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



