3 பிள்ளைகளுக்கும் விசம் பருக்கி, தானும் பருகிய தந்தை!

Date:

மனைவியுடன் ஏற்பட்ட தகராறையடுத்து, தனது மூன்று பிள்ளைகளிற்கும் விசம் கொடுத்து விட்டு, கணவனும் விசமருந்தியுள்ளார்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தெல்பிட்டிய செவனக் காலனியில் இந்த சம்பவம் நடந்தது.

நால்வரும் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

4 வயது சிறுவனும், 13 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுமிகளும் 40 வயதுடைய தந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கணவன் மனைவிக்கிடையில் நீண்டகாலமாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கம்பளை பொலிஸார் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மனைவி வீட்டை விட்டு வெளியேறியதுடன் மூன்று பிள்ளைகளும் தந்தையுடன் தங்கியுள்ளனர். நேற்று இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்த தந்தை, குழந்தைகள் கண்டுகொள்ளாமல் குளிர்பான போத்தலில் விசம் கலந்து, மூன்று குழந்தைகளையும் குடிக்க வைத்துவிட்டு, தனது அறைக்கு சென்று மதுவில் விசத்தை கலந்து அருந்தியுள்ளார்.

இரவு 11.30 மணியளவில் இரண்டு பிள்ளைகள் மற்றும் தந்தைக்கு வாந்தி எடுத்ததுடன், 13 வயது மூத்த மகள் சென்று பக்கத்து வீட்டில் வசிக்கும் பெரியப்பாவிடம் (தந்தையின் மூத்த சகோதரர்) தெரிவித்துள்ளார்.

பின்னர் அனைவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் வீட்டினுள் விசப் போத்தல் கண்டுபிடிக்கப்பட்டது.

விசம் அருந்துவதற்கு முன்னர் படுக்கையில் இருந்து மனைவி மற்றும் பிள்ளைகளின் புகைப்படங்களை கணவர் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்