ஓ.ஐ.சி என குறிப்பிட்டு ஓசியில் மதுபானம் கேட்ட பொலிஸ்காரர் கைது!

Date:

பொலிஸ் பொறுப்பதிகாரி என குறிப்பிட்டு, கல்முனையில் உள்ள உணவகம் ஒன்றிற்குச் சென்று பணம் செலுத்தாமல் மது அருந்த முயன்ற, புதிதாக பணியில் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கல்முனை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைதானவர் தன்னை, எல்பிட்டிய OIC என காட்டிக்கொண்டதாகவும், குடிபோதையில் நடந்துகொண்டதாகவும் உணவக நிர்வாகம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

ஓ.ஐ.சி ஒருவர் கட்டுக்கடங்காமல் நடந்து கொள்வதாக ஹோட்டல் நிர்வாகம் முறைப்பாடு செய்ததையடுத்து அங்கு சென்ற கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி, முதல் பார்வையில் அவர் பொலிஸ் அதிகாரி அல்ல என்பதை உணர்ந்துள்ளார்.

அவர் எல்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி அல்ல எல்பிட்டிய பொலிஸில் கடமையாற்றும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்