நடிகை கீர்த்தி சுரேஷ், தனது பள்ளி நண்பரை 10 வருடங்களாகக் காதலித்து வருவதாகவும் இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் திருமணம் சில வருடங்கள் கழித்து நடக்கும் என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா இதை மறுத்துள்ளார். “இது முழுக்கப் பொய்யான செய்தி. இந்த போன்ற செய்தியை பார்க்கக் கூட விரும்பவில்லை. கீர்த்தியின் திருமணம் தொடர்பான செய்திகளுக்கு இதுதான் பதில். இது தொடர்பாக பேசுவதற்கு எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1