யாழ் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட J/98, J/100 வண்ணார்பண்ணை பொது சுகாதார பிரிவில் டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது
பொது சுகாதார பரிசோதகர் தி. கிருபன் தலைமையில் நடந்த பரிசோதனையில் டெங்கு குடம்பிகள் காணப்பட்ட தனியார் கல்வி நிறுவனம் மற்றும் 4 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதோடு, டெங்கு பரவும் நிலையில் சூழலை வைத்திருந்த 42 பேருக்கு சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டது.
குறித்த பகுதியில் 678 வீடுகள்பரிசோதிக்கப்பட்டதோடு
வழக்கு தாக்கல் செய்யப்பட்டவை தவிர்ந்த ஏனைய நுளம்பு பெருகும் இடங்கள் உடனே உரிமையாளர்கள் மூலம் அழிக்கப்பட்டன.




