பச்சை இல்ல தாவர வளர்ச்சியை கண்காணிக்கவும், சூழலை கட்டுப்படுத்தவும் IOT முறைமையினாலான செய்நிரல் ஒன்றை நோர்வூம் தேசிய பாடசாலை மாணவன் உருவாக்கியுள்ளா்.
அட்டன் கல்வி வலயம் நோர்வூட் தேசிய பாடசாலையில் பொறியியல் தொழில்நுட்ப பிரிவு மாணவன் எஸ்.கிரிஸான் என்பவரே இதனை உருவாக்கியுள்ளார்.
பச்சை இல்லத்தில் தாவரத்தின் வளர்ச்சியை கண்காணிக்கவும் பச்சை இல்லத்தில் உள்ள ஈரப்பதன் வெப்பநிலை ஆகியவற்றினை தன்னியக்கமாக கண்காணித்து இல்லத்திற்கான அனைத்து பரமானங்களையும் தண்ணியக்கமாக கட்டுப்படுத்தக்கூடிய IOT முறைமையினாலான செய்நிரல் ஒன்று உருவாக்கப்பட்டு இணையத்தின் ஊடாக கட்டுப்படுத்தக் கூடிய வசதிகளுடன் கூடிய முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டு பச்சை இல்லத்தில் (Green House) பொருத்தப்பட்டுள்ளது.





