பாடசாலை சித்தி வீதத்தை உயர்வாக பேண பரீட்சையெழுத விடாமல் தடுக்கப்பட்ட சில மாணவர்கள்: யாழில் புலமைப்பரிசில் மாணவர்களிற்கு நடந்த கொடுமை!

Date:

யாழ்ப்பாணம் கல்வி வலயத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை கல்லூரி நிர்வாகம் புலமை பரிசில் பரீட்சை எழுத விடாது தடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் டிசம்பர் 18ஆம் திகதி நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றுவதற்கு இந்த மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லையென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினால் பாடசாலை மட்ட சித்தி வீதத்தில் தாக்கம் ஏற்படும் என கூறியே மாணவர்களை பரீட்சை எழுத விடவில்லை எனவும், ஒரு சில மாணவர்களின் பெற்றோர்களிடம் தமது பிள்ளைகளை தாமாக பரீட்சை எழுத அனுமதிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம் கடிதம் எழுதி வாங்கியதாகவும் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.

spot_imgspot_img

More like this
Related

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...

கனடா ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட இளம் பிசியோதெரப்பிஸ்ட்: ஐ.டி இளைஞனின் அதிர வைக்கும் காதல் குற்றங்கள்!

தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்