26.8 C
Jaffna
February 25, 2025
Pagetamil
இலங்கை

யாழில் இறந்தவர்களையும் உயிர்ப்பித்த குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணிக்கு விளக்கமறியல்!

மோசடி ஆவணம் தயாரித்து காணி விற்பனை செய்த வழக்கில் இரண்டாவது முறையாக கைதான சட்டத்தரணியை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் திருமதி நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.

சட்டவிரோதமான முறையில், ஆறு பரப்புக் காணிக்கு பொய்யான உறுதி முடித்த குற்றச்சாட்டின் கீழ் சட்டத்தரணி ஒருவர் உட்பட ஐந்து பேரை யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

ஓட்டுமடம் பகுதியில் உள்ள குறித்த காணியின் உரிமையாளர் கடந்த 1988ம் ஆண்டு இறந்துவிட்டார். உயிரிழந்த நபர் 2021ம் ஆண்டு விற்பனை செய்துள்ளதாக காணி உறுதி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணியை வாங்கியவர் மற்றும் சாட்சி கையொப்பமிட்டவர்கள் என நால்வர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைதாகியிருந்த நிலையில், அதற்கு உடந்தையாக இருந்து பதிவுகளை மேற்கொண்ட சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சட்டத்தரணி கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் பிறிதொரு காணி மோசடி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். தற்போது, மற்றொ காணி மோசடி வழக்கில் கைதாகியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘வேலை முடிந்தது’; செவ்வந்தியின் குறுந்தகவல்: தம்பியை 24 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

Pagetamil

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

east tamil

மதுபான நுகர்வில் வீழ்ச்சி

east tamil

கனேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரர் கைது

east tamil

முன்னறிவிப்பின்றி நீர் விநியோகம் துண்டிப்பு

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!